Posts

Showing posts from August, 2018

செய்தி குறிப்பு : திருச்சியில் நடைபெற்ற செயற்குழு கூட்டம்

Image
*தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் செய்தி குறிப்பு.* *தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம்  கடந்த சனிக்கிழமை 4.8.18 திருச்சியில் நடைபெற்றது.திருச்சி மாவட்ட தலைவர் திரு சுரேஷ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.* *திருப்பூர் பழ.கவுதமன் அவர்களின் மகன் திலீபன் மற்றும் விழுப்புரம் ஆனந்தன் அவர்களின் சகோதரி அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.* *தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் சார்பில் வழக்கு நடத்தும் பட்சத்தில்  மனித உரிமை ஆணையம் (Human Right Commission) துறையிடம் முறையிட்டு அதனடிப்படையில் ஆலோசனை பெற்று வழக்கு தொடர்வது என்றும்..* *வரும் செப்டம்பர் மாதம் காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் போராட்டம் நடத்துவது என்றும்...* *திரு.கவுதமன் அவர்களின் பதவி விலகளை மீண்டும் பரிசீலனை செய்து கடைசி முயற்சியாக கரூர் மாவட்ட தலைவர் திரு.ரமேஷ் அவர்கள் தொலைபேசி வாயிலாக திரு.கவுதமனிடம் உறுதி படுத்திய பின்பு அவரது  (சங்கப் பொருப்பில் இருந்து) விலகல் ஏற்றுக் கொள்ள பட்டது.* *செய்தி தொடர்பாளர் திரு.சுதாகர் நன்றியுரை நிகழ்த்தின...